நன்றி: பகிர்ந்த உறவுகளுக்கு.
செவ்வாய், 22 மே, 2012
கடவுள் கொடுத்த படைப்பை இப்படி தான் கரை சேர்க்க வேண்டுமோ?
இறைவனின் படைப்புகளில் ஒன்றான மனிதப் படைப்பில் இயல்பாய் நடந்திடும் அதிசயங்களை விட இன்னல்களைத் தாங்கி காட்டிடும் அதிசயம் நின்றிடும் நாள் எதுவோ?
நன்றி
நன்றி
வியாழன், 17 மே, 2012
புதன், 16 மே, 2012
செவ்வாய், 15 மே, 2012
வெள்ளி, 11 மே, 2012
தேடிடுவோம் தீர்வை.. 1
ஒரு கதை உங்களுக்காக...!
ஒரு ஊரில் இருக்கும்
அனைவருமே நிர்வாணமாக அதாவது எப்படியெனில் ஆண், பெண் என அனைவருமே குறிப்பிட்ட வயது
வரை நிர்வாணமாகத்தான் இருக்க வேண்டும். இது அந்த ஊர் பஞ்சாயத்தாரின் மிகக்
கடுமையான கட்டுப்பாடு.
இந்தக் கட்டுப்பாட்டினை
மதித்தால் தான் அந்த ஊரிலே வாழவும் முடியும். அந்த ஊரில் பெண் கொடுக்கவோ அல்லது
எடுக்கவோ முடியும். அவர்கள் வெளியூர் செல்ல வேண்டிய சமயத்தில் மட்டுமே ஆடைகள்
அணிந்து செல்லலாம். இன்னும் கூடுதலாக அந்த ஊரின் வளங்கள், செல்வச் செழிப்பு
எல்லாமே மற்ற ஊர்களை விட மிஞ்சு வண்ணமும் இயற்கை அமைத்து விட்டது.
அதே சமயத்தில்
ஊருக்குள்ளே சண்டை சச்சரவுகளும் இருக்கக் கூடாது. எல்லோருமே மிக சகோதரத்துவத்துடன்
மட்டுமே பழக முடியும். காரணம் அங்கிருப்பவர்கள் பகிர்ந்தளித்தல் குறித்த மனநிலை
அத்தன்மையது.
இந்த ஊரிற்கு புதிதாக
செல்வம் தேடியும், பணி நிமித்தமுமாக ஒருவன் தன் செல்ல மனைவியோடு உள் நுழைகின்றான்.
அப்போது ஊர்க்கட்டுப்பாடுகள் அவனுக்குச் சொல்லப்படுகின்றன. இருப்பினும் சில
காலங்கள் இயல்பு வாழ்க்கைக்கு வர வேண்டும் அவகாசங்கள் அளிக்கின்றார்கள்.
அவகாச காலங்கள் முடிந்த
பிறகும் அவனோ அல்லது அவன் குடும்பத்தினரோ நிர்வாண நிலைக்குச் செல்ல மனம் ஒப்புக்
கொள்ளவில்லை.
இந்நிலையில் ஊர் சபை கூடி
பெரும் பஞ்சாயத்து வைத்து விவாதித்துக் கொண்டிருக்கின்றது. அவன் எவ்வளவோ மன்றாடி
தன் முயற்சியால் ஊர் மக்களை தெளிவடையச் செய்யப் பார்க்கின்றான். அவனால் முடியவே
இல்லை.
அத்துடன் அவன் அந்த ஊரை
விட்டே நகர்கின்றான்.
இப்போது அவனின் செயல்
குறித்தும், ஊர் பஞ்சாயத்தாரின் செயல் குறித்தும் உங்களின் நிலைப்பாடு என்ன?
அடுத்து ஒரு வித்தியாசம்:
ஓரு நாட்டில் மன்னன்
செங்கோலாட்சி கொண்டு அரசாண்டு வருகின்றான். அவனுக்கு வாய்த்த மந்திரிகளாலே அவன்
ஆட்சி செங்கோலாட்சி என்று மக்கள் முடிவு கட்டி விடுகின்றார்கள். ஏனெனில் மன்னன் தன்
ஆட்சியின் பகிர்வை மந்திரிகளுக்கு ஒப்படைத்து விடுகின்றான்.
தும்மினாலும் குற்றம்,
ஏப்பம் விட்டாலும் குற்றம், சுமத்தப்பட்டிருக்கும் குற்றத்தை இல்லையென நிரூபிக்க
முயற்சித்தாலும் குற்றம். இந்தச் சூழலில் அங்கிருக்கும் மக்களின் நிலை என்ன?
அவர்கள் இந்நாடு விட்டு
வெளிநாடுகளுக்கு/ தூர தேசங்களுக்குச் சென்று பிழைப்பு நடத்திடவும்
வழியிருக்கின்றது.
இந்நிலையில் மன்னன்/
மந்திரி குறித்து உங்கள் கருத்து என்ன? மக்களின் செயல்பாடு குறித்து உங்கள்
கருத்து என்ன?
ஞானம் வளர்த்த மாமணிகள்..!
சொல் வேந்தர் சுகி. சிவம் அவர்களின் மகான்கள் குறித்த தெளிவு சிந்தனை மிக்க காணொளி..!
பகுதி : 1
பகுதி : 2
பகுதி: 3
பகுதி: 4
நன்றி: பகிர்ந்த உறவிற்கு
பகுதி : 1
பகுதி : 2
பகுதி: 3
பகுதி: 4
நன்றி: பகிர்ந்த உறவிற்கு
வியாழன், 10 மே, 2012
மனதிற்கு இனிமையான காணொளி.. அருமையான ஒலி வடிவத்துடன்
மனதிற்கு இனிமையான காணொளி அருமையான ஒலி வடிவத்துடன்:
பகுதி 1
பகுதி 2
நன்றி: http://www.youtube.com/user/vijayadurai?feature=watch
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)