செவ்வாய், 24 ஜூலை, 2012

வளர்தமிழ்ச் செல்வி யுவாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

இன்றைய தினத்திலே (25 ஜூலை) தன் பிறந்த நாளினை தம் உறவுகளுடன் கொண்டாடும் என் உயிர்த் தோழி வளர்தமிழ்ச் செல்வி யுவா அவர்களை மென்மேலும் வாழ்வில் உயர்ந்திட வாழ்த்துகின்றேன்.. எல்லாம் வல்ல செந்தூரானின் நன்னருள் என்றென்றும் என் தோழிக்கு கிட்டிடவே நான் வணங்கும் இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்.

படம்

அறத்தொடு யீகையழி யாதோர்நற் திறனே
புறத்தொடு வாழ்விலேபொற் சிலையன்ன - அறமொடு
பொருள்தரு அதற்கிசை யின்பமீந்தெளிதரு முப்பால்
தெள்ளுதமிழ் குறள்வழி தெவிட்டே
நற்குடியுயர நானென்றும் வாழ்த்திட மெந்தோழீ


ஊறிவரு நன்னீர் ஒருதிரட்டுச் சேருங்கால்
மாறிவரு முலகிலே மாப்பொருளா மென்தோழி
நீர்சேரு மிடந்தனிலே நித்த முயரதுவே
நீர்சேரு மிடமதுவும் நிறைந்திடவே மெந்தோழீ


புன்னை மரமொப்ப புதுச்சுவையும் தந்திட்டே
அன்னை மடியமர்ந்து ஆச்சிகதையுங் கேட்டிட்டே
மண்ணை நீயாள மனத்திடமுங் கொண்டிங்கே
விண்ணை யுமீவெல்வாய் வெற்றி தளிர்மகளே!


ஊக்கமுங் கொடுத்தே உயர்வுங் கொடுப்பாய்
ஆக்கமுங் கொடுத்தே அன்பையு மீய்வாய்
தேக்கமிலா பெருவாழ்வு தெளிவடை கிட்டிடவே
நீக்கமற வாழ்த்திடுவே மென்னுயிர் தோழியையே
!

நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...