சனி, 17 மார்ச், 2012

என் ஐயன் ராஜாவிற்காய்....

என் அன்பு மன்ற உறவுகளே,

நம் அன்னைத் தமிழின்பால் அளவிலா பற்றும், அழகுத்தாயாம் முத்தமிழ் மன்றத்தில் முடிவிலாப் புகழும் பெற்று, இலட்சப் பதிவுகள் என்னும் இலட்சியக் கல்லின் மீதேறி இலட்சினை பொறிக்கவிருக்கும் எந்தன் மதிப்பிற்குரிய ஐயன், பெருமன்றம் சகோதரம் ஏ. ஆர். ஆர் அவர்களை எண்ணி என்னுள மகிழ்வு கொள்வதோடு அவர்களுக்காய் நான் கிறுக்கிய கிறுக்கல்களை இங்கு சமர்ப்பிக்கின்றேன்.


ஐயாவின், சொற்திறமையும், மொழி ஆளுமையையும் கண்டு நான் பன்முறை வியந்ததுண்டு. அப்பேர்ப் பட்ட கோ மகனுக்கே மகுடம் புனைய முயற்சிப்பது மா மலையின் கீழ் நின்றாடும் மயூரத்தைப் போன்றது. ஆதலின் பொறுத்தருள்கவே!!

(1)

முதலான வனேமுடிவா னவனேமுத லின்பொருளாய்
தெளிவான வனேதெள்ளு தமிழ்வளர் திருமுருகனே
நின்னை யேத்தியே நெடுங்குறை யிலாபா
வொன்றை பரிவுடன் பூட்டியே
மன்னைவாழ் மகாராசாவிற் கோர்மகுடம் புனைவேனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...