ஞாயிறு, 18 மார்ச், 2012

ஹேமா அக்காவின் திருமண நாளுக்கான வாழ்த்தாக..

நாறொடு இணையும் நல்மலரனைய தேன்
சாறொடு புரளும் தெவிட்டா சுளைப்பலா,
பாரொடு புகழும் பைந்தமிழ் மொழிபோல
வேரொடு தளையும் வெள்ளருகு கொடியாகி
ஊரொடு ஒழுக உயர்புகழ் அடைந்தே -நீவிர்
சீரோடு வாழ சீர்மிகு வேலவனை வேண்டிட்டே..!




சூரியனும் சந்திரனுமாய் சுடர்விடும் நல்விளக்காய்
மாறிவரும் உலகினிலே மதிகொண்டு வென்றிடவே
சபையொடு புகழும் சரித்திரச் சொல்லோடு
சலிக்காவின் பமுசம ரசமிலா நற்தீகையுங்
நலியா நலனொடு குறையா செல்வங்கொண்டு
பெற்ற உறவுகளோடு பெருமைபட வாழ்ந்திடவே
உற்ற தம்பியாய் உம்மை வாழ்த்திடுவேனே..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...