புதன், 24 அக்டோபர், 2012

வலைச்சரம் - மூன்றாம் நாள் பதிவு - நம்பிக்கையே ஆணி வேர்



வானவில்லின் ஏழு நிறங்களான ஊதா, அடர் நீலம், நீலம், பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு ஆகிய ஏழு நிறங்களின் கலவை தான் வெண்மையென்று படித்தாய் நினைவு. அதனால் தான் என்னவோ சூரிய பெருமானும் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருவதாய் ஆன்மீகமும் குறிப்பிடுகின்றது. 

ஆன்மீகத்தின் அடிப்படையே நம்பிக்கை என்ற வேர் தான். நம் வாழ்வில் முன்னேற்றம் வேண்டுமெனில் முதலில் நம்மிடமும் இறைவனிடமும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார்கள். 

எண்சாண் உடம்பு இயங்கிக் கொண்டிருப்பதும் நம்பிக்கை என்ற ஒரு அச்சாணியிலே தான். கண்ணிற்கு புலப்படாத காற்று நம் உதிரத்தில் கலந்து சரீரத்தை எப்படி இயக்குவிக்கின்றதோ அதே நம்பிக்கை என்னும் சக்கரம் தான் உறவுகளின் வலுவிற்கு அடித்தளமாகவும் அமைகின்றது.

துவழும் மனதிற்கு துரிதமாய் வேண்டியதொரு ஊக்கி நம்பிக்கை என்ற ஒரு நற்பொருளே.! நாம் மீது பிறர் காட்டும் கரிசனத்தின் வெளிப்பாடும் நம்பிக்கையைப் பொறுத்தே அமையும். 


இன்னும் நம்பிக்கையைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.. ஆனால் சில வலைப்பூக்களைப் பற்றிய அறிமுகம் தரவேண்டியிருப்பதால் அதன் பக்கமும் கொஞ்சங் கவனம் செலுத்திடுவோம். வாருங்கள் உறவுகளே.,
 பரஞ்சோதி


தான் பெற்ற கல்வியினையும், அறிவுச் செல்வத்தினையும் வருங்கால சந்ததியினருக்கும் பயன்படும் வகையில் இணையத்தில் பல்வேறு வகைகளில் தரவுகளை சேகரித்து தந்திருக்கின்றார்கள். அதன் வழியிலே அவர்களது சில வலைப்பூக்களையும் அதனில் நான் ரசித்த பதிவுகளையும் இங்கே காண்போமே!

சாதனையாளர்கள்:

சோதனைகளால் மனம் வேதனை அடைந்தாலும் தான் கொண்ட இலட்சியத்தின் பாதை நோக்கி பயணிக்கும் மாந்தரே சாதனையெனும் கனியினை புசித்து மகிழ்கின்றார்கள். அதன் வழியிலே இத்தளத்தில் பதிந்திருக்கும் கட்டுரைகளில் சிலவற்றின் மீயிணைப்பை இங்கே தருகின்றேன்.

7 மணி நேரத்தில் 65 கி.மீ ஓடிய 4 வயது சிறுவன்

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது


ஜனாதிபதியிடம் பரிசு பெற்ற தமிழ் மாணவி

 

சிறுவர் பாடல்கள்:

அடுத்தடுத்த தலைமுறையினருக்கு நவயுக அறிவியலின் வளர்ச்சியினாலும், உலகின் வேகமான ஓட்டத்தினாலும் பலவற்றை கற்றுக் கொள்ள வழியின்றி போகலாம். 


இன்றும் நம் குழந்தைகளுக்கு நீதிக் கதைகள் சொல்லிக் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்துவோர் நம்மில் மிகச் சிலரே.  இந்தத் தளத்தில் இருக்கும் குழந்தைகளுக்கான பாடல்களில் சிலவற்றை மீயிணைப்பாகத் தருகின்றேன்.
 

மயிலே குயிலே

பள்ளிக் கூடம் போகலாமே


அழகர் யானை

 

சிறுவர் பூங்கா:

மாவீரன் சத்ரபதி சிவாஜிக்கு வீரக் கதைகளை சொல்லி வளர்த்தவர் அவரது தாயார் ஜீஜாபாய் அம்மையார். சிறு வயதிலே விதைக்கப்படும் உள்மனத்திடம் தான் அவன்/ள் பெரியவர் நிலையினை அடையும் போது பலன் கொடுக்கின்றது. 


அத்தகைய நீதிக் கதைகளை சிறுவர் பூங்காவானது போதுமான அளவிற்கு நிரப்பி வைத்திருக்கின்றது. அவற்றில் சில.
 

கஞ்ச மகா பிரபு

நயவஞ்சக நரி


புத்தி பலம்  

 மகுட தீபன்

கவிஞர் மகுட தீபன் அவர்கள் நற்சிந்தனை கொண்ட இலக்கியவாதி, தமிழ்ச் சிந்தனையிலூறிய ஓர் நற்பலாச் சுளை. முகவையில் நடைபெறும் பெரும்பாலான இலக்கியக் கருத்தரங்கு / பட்டிமன்றங்களில் தன்னுடைய ஆழமான கருத்துகளை கவிதைகளாகவும், கட்டுரைகளாகவும், விவாதப் பொருளாகவும் எடுத்துரைப்பதில் வல்லவர்.


சிவனின் மீது தீராத அன்பு கொண்ட நம் மகுடதீபன் ஐயா, ஆடலரசன் என்று சிவபெருமானைத் துதித்தே ஒரு வலைப்பூ முழுமையும் சிவனின் பெருமைகளைப் பாடியிருக்கின்றார்கள். அவர்களது சில வலைப்பூக்களையும் அதில் என்னைக் கவர்ந்த பதிவுகளையும் காணத் தருவதில் மகிழ்வெனக்கு.

 

கவிதை – 1000:

மகுட தீபன் அவர்களின் கவிதை – 1000 தளத்திலிருந்து சில கவிதைகளுக்கான மீயிணைப்புகள்:
 

கவ்வேன்

பாணன் கேட்கிறான் . . .


சீதைதான் பெண்ணே நீ !

 

தமிழ் கவிதைகள்:

மகுட தீபன் அவர்களின் இறை பக்தியினையும், தமிழ்ப் பற்றினையும் தனது எழுத்துரு வடிவாய் காட்டியிருக்கின்றார்கள். அதனில் சிலவற்றை இங்கே தருகின்றேன்.


அற்புதமாய் எழுக


இன்னுமொரு முறைவருமோ


மண்ணில் தெரியுது சொர்க்கம்

 

ஆடலரசன்:

தில்லையம்பலவாணனின் மீது கொண்ட தீராத பற்றில் உருவான இத்தளத்திலிருந்தில் எனக்குப் பிடித்த சில பதிவுகளை இங்கே மீயிணைப்பாகத் தருகின்றேன்.


மனைக்காவல்


சோதி


மன்று

 

சேது பூமி:

திருப்புல்லாணி, திரு உத்திரகோசமங்கை, தேவிபட்டினம் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய புண்ணிய தலங்களின் பெருமையை சேது பூமி எடுத்துச் சொல்கின்றது.

திரு உத்திரகோசமங்கையின் வரலாறு

தேவிபட்டினம் வரலாறு





கவியரங்கம்:

காணொளிகளாய் கவிடைத்திருக்கின்றார்கள். இதில் தாய் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது.

கனவு மெய்ப்பட வேண்டும். – பாரதி விழா

முருகன் திருவடி – வள்ளலார் விழா

தாய்







புல்லாணிப் பக்கங்கள்


வைணவ மார்க்கத்தின் பெருமைகளைச் சொல்லிடும் ஓர் அருமையான வலைப்பூ. நிறுவனர் தி.ரகுவீரதயாள் ஐயா அவர்கள். இந்த வலைப்பூவினை ஆராய்ந்து சொல்லும் அளவிற்கான திறமை எனக்கில்லாததால் ஒரு சில பதிவுகளை இங்கே பதிய விரும்புகின்றேன்.

திருப்புல்லாணி மாலை

வெண்ணெய் உண்ட பெருமாயனாய் எங்கள் தேசிகன்




யுவாவின் எண்ணச் சிதறல்கள்

புதுக்கவிதை தோட்டத்திலே பூத்திருக்கும் ஓர் மலர். எந்தன் ஆருயிர்த் தோழியான யுவா அவர்களின் நீரில் இடும் கோலங்கள் கவிதை சகோதரம் ஒட்டக்கூத்தன் அவர்களால் முத்தமிழ் மன்றத்தின் வாயிலாக நடாத்தப்பட்ட 
கவிதைப் போட்டியில் பரிசினைப் பெற்றது. 

போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் இளைஞர்களுக்காக தேர்வு சம்பந்தமான தகவல்களை தனியே திரட்டியும் கொண்டிருக்கின்றார்கள். இந்த வலைப்பூவில் என்னைக் கவர்ந்த கவிதைகள்
 

நீரில் இடும் கோலங்கள்.
 

வாழ்வின் இறுதி நாள்

ஏக்கம்!!!

விட்டில் பூச்சிகள்

தன்னைப் பற்றி சொல்லிக் கொள்ள எதுவுமே இல்லை என்று எளிமை நடையினை இயல்பிலே உருவாகக் கொண்டவர், எதற்கும் சளைக்காத மனிதர்; வாழ்வில் அன்பினையும், நகைச்சுவைத் தன்மையினையும் தன் எழுத்துகளில் மூலம் நமக்கு சொல்லிடும் மாந்தர். 

இலங்கைத் தமிழிலே இனிமை பொங்க உரையாடுபவர். இவரது கவிதைப் படைப்புகளில் காதல் ரசம் வழிந்தோடும். நாமும் பருகித் தான் பார்ப்போமே.! வாருங்கள் உறவுகளே..

நான் அங்கு நலந்தானா?

சித்திரம் நீயடி.

அவள் கூந்தல் வாசம்!


 நகைச்சுவை  - மொக்கை

இந்த வலைப்பூவின் சொந்தக்காரர் என்றுமே எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். முத்தமிழ் மன்றத்திலே 1.5 லட்சம் பதிவுகளுக்கு மேல் பதிந்து முதன் முதலாக முத்தமிழ் சிகரம் என்ற பட்டத்தைப் பெற்றவர். 

நகைச்சுவை ததும்பும் இவரது வரிகள் என்றுமே சலிக்காதவை. இவருடைய பல பதிவுகளைப் படித்து விட்டு சிறிது நேரம் யோசித்தே பல முறை சிரித்திருக்கின்றேன். 

வார்த்தை பிரயோகத்தில் கில்லாடியான இவர்களது வலைப்பூவில் சில மலர்கள் தங்களின் பார்வைக்காக..
 

மொக்கை வந்தாச்சு..!

மொக்கை Rocks..!


மொக்கை ஒரு மதப் பிரசங்கியார்..!


6 பேருக்கு தேவையான உணவு..!


மொக்கையின் விமானப் பயணம்..!



ஔவையின் உளறல்கள்

எளிமையின் இலக்கணம், உதவும் மனப்பாண்மை, கருத்துச் செறிவு நிறைந்த வரிகள்,  தமிழின் மீது அளவு கடந்த நேசிப்பு என பல்வேறு வடிவங்களில் உலாவரும் ஔவை அவர்களின் வலைப்பூவான ஔவையின் உளறல்களில் உலகைப் புரட்டிப் போட்ட 100 அறிவியல் கண்டுபிடிப்புகள் என்று ஆங்கில நூலினை தன் திறங்கொண்டு தமிழிலிலே மொழி பெயர்த்து அதனை அனைவரும் படித்து பயனடையச் செய்கின்றார்கள்.

அத்தோடன்றி இவர்களின் கவிதை வரிகளைப் படித்திடும் போது அப்படியே கருவோடு இலயித்திடுவோம் என்பது நிதர்சனமான உண்மை. 


வெண்பா இயற்றுவதில் வல்லவரான இவர் புதுக்கவிதைகளிலும் புயல் பறக்க விளையாடுகின்றார். அவர்களின் சில பதிவுகள்:

வாடகைத்தாய்


தனியாய் அலைந்தேனே மேகமாய்


டிசம்பர் 6


மேகச் சித்திரங்காள்!




ஆங்கிலம் கற்போம்

ஆங்கில அறிவு இன்றியமையாததாக இன்றைய கால கட்டத்தில் விளங்குகின்றது. தமிழ் வழிக்கல்வி பயிலும் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தேர்வது என்பது கொஞ்சம் சிரமமான விடயமே.! 

திருவாளர் அருண் அவர்களால் தொடங்கப்பட்டிருக்கும் இவ்வலைப்பூவில் எளிய முறையில் ஆங்கிலத்தினை நாம் கற்றுக் கொள்ள முடியும். பயிற்சிப் பாடங்களோடு சந்தேகங்களுக்கும் விடையளிக்கின்றார். 

வலைப்பூவில் முக்கியமானவைகளில் சில தங்களின் பார்வைக்காக..

ஆங்கில பாடப் பயிற்சி - 1 (Grammar Patterns 1)

ஆங்கிலம் துணுக்குகள் Aangilam Mini Lessons

ஆங்கிலம் பேசுவது எப்படி? - 1 (Asking the time)






அடுத்த பதிவினில் மேலும் பல அருமையான வலைப்பூக்களைப் பார்க்கலாம்.

நன்றி

4 கருத்துகள்:

  1. அருமையான வலைப்பூக்களின் அறிமுகத்திற்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. அறியாத பல தளங்கள்... இன்று காலை முதலில் படித்தது உங்களின் வலைச்சரம் தான்... அருமையான பல தளங்கள்...

    மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...