சனி, 17 மார்ச், 2012

பரஞ்சோதியாருக்காய்..!! - 2

காயத்தின் மீதேறியே காயங்கள் கவரும்போது
சாயமில்லா தொருள்ளம் சட்டென்று உதவியதே
மாயமாய் வந்ததோ என்றெண்ணி மனக்கவலை
ஓயுமொரு நாளில் உண்மையும் அறிந்திட்டேனே.

நானெல்லாம் வளம்பெற நல்ல நிலைதெளிபெற‌
நாளெல்லாம் தருநல்போத னையுமே மதில்விளை
ந‌ல்சாதனை யாய்மலரநீ யுழைத்தீரே நன்றெனக்கு
நான்மறவேன் மென்னாளும் நல்லதொரு நன்றியினை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக