சனி, 17 மார்ச், 2012

எந்தன் உயிரே!!

உந்தன்மடியில் தலைவைத்து
வயிற்றில் முகம்புதைத்து
என்னிலை மறந்த விருஇமைதனை மூடியே
சிலமணித்துளிகள் சிறப்பாய் நானுறங்க
சீராட்டிடுவதாய் நானுணர்ந்தேன்…

கண்ட உணர்வதனை களிப்புடன் செய்திடவே
நனவிலே நீயும் நடத்துவது எப்போது??..
கருத்தறிந்து படித்தவர்களே காரணம் சொல்வீரே
பொருளறிந்து படித்தவர்களே புது விளக்கம் தருவீரே...


நன்றி...

என் உயிருக்குயிரானவளே/ உயிருக்குயிரானவரே,

உனது மடியில் தலை வைத்து, உந்தன் வயிற்றில் என் முகம் பதித்த வண்ணம் என் இயல்பான கடமைகள், அலுவல்கள்,இன்ன பிற இவையெல்லாம் மறந்து என் இமைகள் மூடியே சில மணித்துணிகள் நான் உறங்குதல் வேண்டும். அந்த உறக்கத்தை நீங்கள் சீராட்டிடுவதாகவும் உணர்ந்தேன்.

நான் கண்ட கனவினை நனவாக்கச் செய்திடல் எப்போது?

ஏன் இவ்வாறு எனக்குத்தோன்றியது என்று இந்த வரிகளை கருத்து அறிந்து படித்தவர்களே காரணம் சொல்லுங்களேன்..

இதன் உட்பொருள் அறிந்து கொண்ட பெருமக்களே புதுமையான விளக்கம் தாருங்களேன்.


இப்படி எழுதிய கவிதை இது.

நன்றி
:salute: :salute: :salute:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...