வெள்ளி, 16 மார்ச், 2012

யுவாவின் நாலாயிர‌த்திற்கு

பரவை சூழ் பாரினிலே
கறவையீந்த பாலைப்போல‌
அறிவை வளர்க்கும் கருத்தினியே
தெளிவாய்த்தரும் என் தோழியே!!!

நீயிர் படைத்த இந்நாலாயிரம்
அடித்தளமே பல்லாயிரம்
பண்பான நம் மன்றத்தில்
நட்போடு நாளும் கலந்து
சிறப்போடு வாழ்வீரே.
சீரிளம் தோழியரே!!

எந்நாளும் இளகா நட்பாய்
இருப்பீரே இந்த மதியம்மையாரே!!

என்னிறையோடே
ஏந்தித்தருகின்றேன் ஈர்த்துக்கொள்வீராக....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக