சனி, 17 மார்ச், 2012

என் பெற்றோரை நினைத்து சில கிறுக்கல்கள்..

பிப் 01, 2011 8:20 அம

இன்று எனக்குப் பிறந்த நாளாகையால் என் பெற்றோரை நினைத்து சில கிறுக்கல்கள்..



காட்டோடும் போரிட்டு களர்நிலனோடு பயிரிட்டு
மாட்டோடுமு ழன்று மகனை வளர்த்தீரே
வாடைக்கும் கோடைக்கும் வசந்தந்தருங் வேளைக்கு
மாடையாயி ருந்தென்னை நன்றே வளர
நலிந்தீரே நின்சுகமே; நற்றமிழ் பெற்றோரே


அணி : சிலேடையணி

*+*+*+*+*+*+*+*+*+*+*+* *+*+*+*+*+*+*+*+*+*+*+* *+*+*+*+*+*+*+*+*+*+*+*

அகவையோ திங்கள் மூன்றினிலே பெற்ற
மகவையோ பருகிட்டுயர் மடிப் பாலைத்தள்ள
நடுங்கிய குலையுயிரின் நகரவே தனைய‌தனை
ஒடுங்கிய பின்னொரு வேளையோதினீர் எமக்குமே!
அன்றே செய்வித்த அருந்தவச் செயலேல்
ஆகி நிற்கின்றேன் அகவை ஐந்தைதாய்..

அன்றேல் என்றோ நானே தடமறியா
செம்மறியாய் செத்துத்தான் போயிருப்பேன்
வாழும் வாழ்வதனில் வகையெடுக்க முடியா
தேவனின் பார்வையோடே தேர்ந்திருப்பர் சிலரே

ஆதியுஞ் சொல்லி அழகுற ஓதி
சாதியுஞ் சொல்லி சபையேற மெனக்கு
பாதியாய் ஈந்த பறைசாற் றுயிரே
நாதியாய் நானிருக்க நிம்மையே
நானுங் காப்பேன் எக்கணமு மருள்வீரே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக