ஞாயிறு, 18 மார்ச், 2012

பெற்றோருக்காய்

அம்மா:
அறுவரி லொருவராய் பிறந்தீர், நல்லுறவு
ஆறிடா வண்ணமாய் வளந்தீர் ‍‍- அகவை
தேறியே ஆனைமுக நாமமுங் கொண்டு
மாறிடா குணமொ டீகையுங் கொண்டெடுத்
தெறிந்து பேசிடா இயல்போடு பேணிடும்
உறவொடு நல்லோர் ஒருவரை மணந்தீரே!



அப்பா:
இருத்தாரத் திலேஇளை யவரின் முத்தாராமே
ஒருத்தார மக்களை வெறுத் தாருமிலவே
பொறுத்தா பூமியாள்வா ரென்று நின்றீர்
பொறுத்தே! பொழுதுகளும் நலமொடு கழியவே!


இருவருக்கும்:
ஐயாறு ஆண்டோட‌டுத் த‌நான்கு கூட்டி
மெய்யாலே வாழ்வோடு மேன்மையுஞ் சூட்டி
அன்பாலே ஈந்தெடுத்த மக்களோடு நீவிர்
ஆண்டுபல வாழ்ந்திட அவர்களி லொருவனாய்
ஆண்டவன் துணையோ டாயுள்நிறை வேண்டிட்டேன் ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...