ஞாயிறு, 18 மார்ச், 2012

யாரிடம் கேட்பேன்?








வரம்தந் தாய்வளம் தந்தாய் விட்டகலா
வரிவரி யாய் உறவுமீந்தாய் நெறியொடு
இன்பமுங் கூடி இசைபட வாழீரென்றோர்
அன்பெனும் உறவை அமைத்திட்ட மென்னிறைவா

சண்டையும் சச்சரவும் சாதீயக் கொடுமையோடு
மண்டையும் உடைந்து மரணமும் நேர்ந்திட‌
விட்டுப்பார்க் கும்பட்டமாய் வேடிக்கையுங்காட்டி
சட்டென்று நீவிறக்கும் சாமர்த்தியந்தான் எங்கே?

வீரவணக்கம் செலுத்த விழுமியே வருமிளைஞர்
ஈரத் தலையொடு செங்குருதியை துவட்டுவதேன்
யாருஞ்சொல் லித்தடுத்திட வேண்டாவோ! இன்னிலை
தானாய் உணரதவழ்ந்து வருங்கால முமெங்கே?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...